/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு
/
அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு
ADDED : மே 26, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சேகர், 54. இவர் நேற்று முன்தினம் காலை அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்தாக தெரிவித்தார்.
அவரது மகன் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.