sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம்

/

மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம்

மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம்

மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் ஆடி சுவாதி மகாருத்ர யாகம்


ADDED : ஆக 12, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆடி மாத சுவாதி நட்சத் திர நாளில், சிவபெருமான் தன் திருவடியில் சுந்தரமூர்த்தி நாயனாரை சேர்ந்ததையொட்டி மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் மகா ருத்ரயாகம் நடந்தது.

சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் எனும் சுந்தரரர். இவர் பாடிய தேவாரங்கள், 7ம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நுாலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

அனைவரையும் அடியா ராக ஏற்றுக்கொண்ட சிவன், சுந்தரரை தோழனாக ஏற்றுக்கொண்டார். ஓர் ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரரை சிவன் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டார்.

இதனையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்தில் உள்ள சங்கிலி நாச்சியார் - பரவை நாச்சியார் கோவிலில் மூன்று நாள் ஆடி சுவாதி மகாருத்ர யாகம் கடந்த 9ம் தேதி 9:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரு நாட்கள் நான்கு கால மகாருத்ர யாகம் நடந்தது.

மூன்றாவது நாளான நேற்று காலை 10:00 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு மகாருத்ர யாகம் நிறைவு பெற்றது. 12:00 மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி நாயனார் சாரிடபிள் ட்ரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us