ADDED : ஆக 18, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, : வயிற்று வலியால் அவதிப்பட்ட செக்யூரிட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் ஒதியம்பட்டு மாதாக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிக்கோலஸ், 58; தனியார் செக்யூரிட்டி. இவர் கடந்த 2 வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை வலி அதிகமாகவே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
