ADDED : மே 12, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பரமேஸ்வரர் கோவில் மற்றும் பொன்முடி கோடி சுவாமிகள் சித்தர் பீடத்தில் நடந்த அபிேஷக விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
சின்ன கோட்டக்குப்பம், இ.சி.ஆரில், பார்வதி உடனுறை பரமேஸ்வரர் கோவில் மற்றும் பொன்முடி கோடி சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளது. இக்கோவிலில், அஷ்ட மகா கால பைரவர், கால பைரவிக்கு தனி சன்னிதி உள்ளது.
இங்கு, 11வது ஆண்டு, அபிேஷக விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, பார்வதி உடனுறை பரமேஸ்வரர், 12 ராசி மற்றும் 28 நட்சத்திர லிங்கங்கள், பொன்முடி கோடி சுவாமிகளுக்கு ஆண்டு சிறப்பு அபிேஷகம், யாகம், மகா தீபாராதனை நடந்தது.