sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் தற்கொலை வழக்கு விசாரணை செய்யாத இன்ஸ்.,மீது நடவடிக்கை; நீதிபதி மோகன் பரிந்துரை

/

பெண் தற்கொலை வழக்கு விசாரணை செய்யாத இன்ஸ்.,மீது நடவடிக்கை; நீதிபதி மோகன் பரிந்துரை

பெண் தற்கொலை வழக்கு விசாரணை செய்யாத இன்ஸ்.,மீது நடவடிக்கை; நீதிபதி மோகன் பரிந்துரை

பெண் தற்கொலை வழக்கு விசாரணை செய்யாத இன்ஸ்.,மீது நடவடிக்கை; நீதிபதி மோகன் பரிந்துரை


ADDED : ஏப் 02, 2024 04:20 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உரிய விசாரணை செய்யாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி மோகன் போலீஸ் தலைமையகத்திற்கு பரிந்துரை செய்தார்.

கூடப்பாக்கம் அகரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலியவரதன் மகள் ஆனந்தி (எ) பிரேமா. இவருக்கும் கிளிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, தனது 4 வயது ஆன் குழந்தையுடன் ஆனந்தி பிரிந்து சென்று தந்தை வீட்டில் தங்கினார்.

தனது கணவர் ராஜா 2வது திருமணம் செய்த கொண்டதால், மனமுடைந்த ஆனந்தி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தனது மகள் தற்கொலைக்கு காரணமான ராஜா மீது நடவடிக்கை எடுக்க கலியவரதன் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார்.

வரதட்சனை கொடுமை, 2வது திருமணம் செய்த கொண்டு தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் ராஜா, அவரது சகோதரர் மகாலிங்கம் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தலைமை குற்றவியல் நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார்.

அதில், ராஜா மற்றும் மகாலிங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலீசாரால் சரிவர நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனை எதிரிகளுக்கு அளித்து இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஆனால் வழக்கு விசாரணை அதிகாரியாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் இனியன், உண்மை உணர்வுடன் விசாரணை செய்யவில்லை. தனது கடமையை புரிந்து கொள்ள தவறிவிட்டார் என கூறியதுடன், போலீஸ் உயர் அதிகாரிகள் இனியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.






      Dinamalar
      Follow us