ADDED : மே 29, 2024 05:24 AM
அ நிறம் | அளவு
பாகூர் : இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர் பகுதியை சேர்ந்த 23 வயதுள்ள இளம்பெண், கடலுாரில் பணிபுரிகிறார். இவருக்கும், கொம்மந்தான்மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் தினேஷ் பலமுறை உல்லாசமாக இருந்தார். இந்நிலையில், தினேஷ், வேறு ஒரு பெண்ணை கடந்த 26ம் திருமணம் செய்து கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தினேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், வழக்குப் பதிந்து, தினேஷை தேடி வருகிறார்.
