உழவர்கரை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
உழவர்கரை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 20, 2026 06:04 PM
புதுச்சேரி: உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த, முன்னாள் மாணவர்களின் மறு கூடல் விழாவில், பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில், முன்னாள் மாணவி சித்ரா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவராம் தலைமை தாங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று கூடிய, முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். பள்ளிக்கு, முன்னாள் மாணவர்களின் சார்பாக தகவல் பலகை வழங்கப்பட்டது. முன்னாள் ஆசிரியர்களின் சார்பில் பொன்னீஸ்வரி ஏற்புரையாற்றினார். முன்னாள் மாணவி இந்திரா பிரியதர்ஷினி நன்றி கூறினார். பெர்னதெத்ழுர்தன், இரிசப்பன் ஆகியோர் தொகுப்புரையாற்றினார்.
விழா, ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தினர். இந்த நிகழ்ச்சியில், பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
