sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாகூரில் அங்கன்வாடி மையம் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி

/

பாகூரில் அங்கன்வாடி மையம் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி

பாகூரில் அங்கன்வாடி மையம் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி

பாகூரில் அங்கன்வாடி மையம் அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி


ADDED : ஜூலை 24, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூரில் சாராயக்கடை இயங்கி வந்த இடத்தில், அங்கன்வாடி மையம் அமைத்திட கோரி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அங்கன்வாடி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

பாகூர் ஏரிக்கரை வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் வாடகையில் இயங்கி வருகிறது.

கர்ப்பிணி, தாய்மார்கள், குழந்தைகள் பயன் பெரும் வகையில், அங்கன்வாடி மையத்திற்கு அரசு கட்டடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏரிக்கரை வீதி நுழைவு வாயில் பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சாராயக்கடை விற்பனை உரிமம் காலவதியான நிலையில், அந்த கொட்டகை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

மீண்டும் அந்த இடத்தில் சாராயக்கடை அமைக்க கூடாது எனவும், அங்கன்வாடி மையத்திற்கு கட்டடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காலியாக உள்ள அந்த இடத்தில், அங்கன்வாடி மையம் அமைத்திடக்கோரி, அரசின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், 'அங்கன்வாடி மையம்' என்ற பெயர் பலகையை, அப்பகுதி மக்கள் அமைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us