/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
/
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 13, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், உள்ள நடராஜன் சுவாமிக்கு, ஆனி திருமஞ்சனம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு ஆனி திருமஞ்சனம் நடந்தது. நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.