தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதா?

புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதா?

புதுச்சேரியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறதா?


ADDED : ஏப் 08, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2024 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

புதுச்சேரியில் முதல்வராக இருப்பது ரங்கசாமி. அவர்கள் கூட்டணியில் ரங்கசாமியின் கட்சி தான் பெரியது. புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதி தான் உள்ளது. அதிலும், பா.ஜ., தான் போட்டியிடும் என ரங்கசாமி வாயால் சொல்ல வைத்து விட்டனர்.

ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம் தான். ஆனால், விதி இப்போது நமச்சிவாயத்துக்கு ஓட்டு கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அந்த கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது தான் ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது. ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ., பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது.

தேர்தல் வந்தால் மட்டும் தான், ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து பற்றி நினைவுக்கு வரும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்றனர்.

புதுச்சேரியில் ஓடுகிறதா என்ற கேள்வி வருகிறது. புதுச்சேரி மக்கள் போராடி பெற்ற உரிமையை, மோடி அரசு பறிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார் ரங்கசாமி. மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, புதுச்சேரி மக்கள் பலியாகி விடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலாய்த்த முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ''புதுச்சேரி உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்திருந்தவரை தேர்தலில் நிறுத்தியுள்ளனர். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறியுள்ளார் என கணக்கு போட்டு பார்த்தால், எனக்கே தலை சுற்றுகிறது. தி.மு.க.,வில் இருந்தவர், ம.தி.மு.க., சென்றார். அங்கிருந்து த.மா.கா.,விற்கு தாவினார். பின், புதுச்சேரி மாநில காங்கிரசுக்கு தாவினார்.''அங்கிருந்து மீண்டும் த.மா.கா., வந்தார். பின்னர் அங்கிருந்து காங்கிரசுக்கு தாவினார். காங்கிரசிலிருந்து தற்போது பா.ஜ.,வுக்கு இடம் பெயர்ந்துள்ளார். இன்னும் இரு மாதம் கழித்து நான் வந்தால், அவர் எந்த கட்சியில் இருப்பாரோ... யாமறியேன் பராபரமே. அதுநமச்சிவாயத்துக்கும் தெரியாது,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us