/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது
/
பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது
ADDED : மே 05, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.
உறுவையாறு ஜெயக்குமார் நகர் பாரதிராஜா, 21; தமிழக பகுதியான பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமணா, 25, ஆகியோர் மது குடித்து விட்டு உறுவையாறு நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம், ரெங்கா ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்க ராஜ், 25. இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு பண்டசோழநல்லுார் அரசு மருத்துவனை எதிரில் நின்று கொண்டு தகராறு செய்தார். அவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.