ADDED : மார் 31, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : பொதுமக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தனம், 53. இவர், நேற்று மதியம் குடித்து விட்டு கரியமாணிக்கம் போஸ்ட் ஆபிஸ் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், முருகானந்தத்தை கைது செய்தார்.

