ADDED : ஜூன் 08, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மேம்பாலம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த கனகராஜ், 20; என்பவரை கைது செய்தனர்.