ADDED : ஜூன் 19, 2024 11:22 PM
பாகூர் : பாகூர் அருகே தம்பதி மற்றும் அவர்களது மகனை தாக்கி, மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள சின்ன ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபு குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் வேணுகோபால் குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. கோபு மனைவி தவமணி மற்றும் வேணுகோபால் மனைவி மகேஸ்வரி இருவருக்கும் நேற்று வாய் தகராறு ஏற்பட்டடது. சத்தம் கேட்டு வெளியே வந்த மகேஸ்வரி மகன் விஷ்மன், தவமணியை தாக்கி கீழே தள்ளி உள்ளார். தடுக்க வந்த அவரது கணவர் கோபு, மகன் மோனிஷ்குமார் 10; ஆகியோரை விஷ்மன்19, அவரது சகோதரர் விமலன் 18; தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பாகூர் போலீசார், மகேஸ்வரி அவரது மகன்கள் விஷ்மன், விமலன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.