sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மருமகன் மீது தாக்குதல் மாமனார், மாமியார் மீது வழக்கு

/

மருமகன் மீது தாக்குதல் மாமனார், மாமியார் மீது வழக்கு

மருமகன் மீது தாக்குதல் மாமனார், மாமியார் மீது வழக்கு

மருமகன் மீது தாக்குதல் மாமனார், மாமியார் மீது வழக்கு


ADDED : ஜூன் 03, 2024 05:21 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : மருமகனை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மணிபாரதி, 29; மெக்கானிக்.

இவரது மனைவி கடலுார், குப்பன்குளத்தை சேர்ந்த சங்கீதா, 26. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மணிபாரதி, அங்குள்ள தில்லை மேஸ்திரி வீதியில் நேற்று நின்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக காரில் சென்ற இவரது மாமனார், மாமியார், மணிபாரதியிடம் மகளிடம் சேர்ந்து வாழவேண்டும் என கூறினர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த, மாமனார் கஜேந்திரன், மாமியார் கங்கா ஆகியோர் மணிபாரதியை தாக்கினர். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us