ADDED : ஏப் 08, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
இவர் தனது வீட்டின் வழியாக செல்லும் பொதுமக்களை தினமும் திட்டிக் கொண்டிருந்தார். அதனை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பத்மநாபன், 22, என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சீனிவாசன், கட்டையால் பத்ம நாபனை சரமரியாக தாக்கினார். காயமடைந்த பத்மநாபனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், சீனிவாசன் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

