ADDED : ஏப் 29, 2024 04:46 AM
அ நிறம் | அளவு
பாகூர் : கடலுார் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தயாளமூர்த்தி மகன் சுகன்ராஜ் 27; டிராக்டர் டிரைவர்.
இவர் கடந்த 24ம் தேதி மணமேட்டில் உள்ள பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தினார். அப்போது அவரது ஊரைச் சேர்ந்த வசந்த், பிரேம்குமாரும் மது அருந்தினர். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், பிரேம்குமார் இருவரும் சுகன்ராஜை திட்டி பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த சுகன்ராஜை கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுகன் ராஜ் புகாரின் பேரில் உதவி சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம், வழக்குப் பதிந்து வசந்த், பிரேம் குமாரை தேடி வருகின்றனர்
