sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோர்ட்டில் சாட்சி கூறிய தம்பதி மீது தாக்குதல்

/

கோர்ட்டில் சாட்சி கூறிய தம்பதி மீது தாக்குதல்

கோர்ட்டில் சாட்சி கூறிய தம்பதி மீது தாக்குதல்

கோர்ட்டில் சாட்சி கூறிய தம்பதி மீது தாக்குதல்


ADDED : ஆக 15, 2024 04:54 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2 பேர் மீது வழக்கு பதிவு

திருபுவனை: கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம், வானுார் சாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி, 74; இவரது மனைவி மல்லிகா, 68. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமு குடும்பத்திற்கும் இடையே கடந்த 2019ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் நாராயணசாமி குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நாராயணசாமி, அவது மனைவி மல்லிகா மற்றும் மகன் ஆகியோர் கோர்ட்டில் ராமு, அவரது மகன் புருேஷாத்தமன் மற்றும் திருமூர்த்தி ஆகியோருக்கு எதிராக சாட்சி கூறினர்.

இதில், ஆத்திரம் அடைந்த ராமு, அவரது மகன் புருேஷாத்தமன் ஆகியோர் கடந்த 10ம் தேதி காலை 8:30 மணிக்கு நாராயணசாமியின் வீட்டிற்குச் சென்று, வழக்கை வாபஸ் வாங்கக் கூறி, அவரையும் அவரது மனைவி மல்லிகா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயம் அடைந்த இருவரும் அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாராயணசாமி புகாரின்பேரில் ராமு உட்பட இருவர் மீது கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us