ADDED : மே 29, 2024 05:18 AM

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டையில் உலக பல்லுயிர் தினத்தையொட்டி, நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி அரசு வனத்துறை மற்றும் அர்பன் ட்ரைப்ஸ் புரோகிராம் ஆப் அனிமல் ரெஸ்குயர்ஸ் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் கலைச்செல்வன், அனிமல் ரெஸ்குயர்ஸ் வின்னிபீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் விலங்குகள் போன்று உருவ பொம்மை அணிந்து பொதுமக்களுக்கு பல்லுயிர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொாடர்ந்து இரண்டாவது நாளாக லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பறவைகளை காணுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.