ADDED : மார் 26, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பண்டசோழநல்லுார் திருவருட்பா வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளிச்சுற்றியுள்ள கிராமங்களில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, புதிய கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்தனர்.

