ADDED : ஜூன் 17, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் 'கடற்கரையை சுத்தம் செய்தல்' நிகழ்ச்சி நடந்தது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் கிளமென்ட் சகாயரட்ஜா லுார்து முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அலுவலர் பிஸ்லேரி, ஜெய்சங்கர், விஷ்ணுவர்தன், நந்திவர்மன், விஜயகுமார், சுபலட்சுமி, ஜஸ்டினா, கரோலின், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து காலாப்பட்டு கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து காலாப்பட்டு கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில், திடக்கழிவுகளை அப்புறப்படுத்தினர்.