ADDED : செப் 16, 2024 05:15 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, : ஓட்டல் எதிரில் நிறுத்திய பைக்கை காணவில்லை என பெயிண்டர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ், 30; பெயிண்டர். இவர் கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணிக்கு தனக்கு சொந்தமான பைக்கில், அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டல் எதிரில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
பின் வந்து பார்த்த போது அவரது பைக் காணமால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் பெரியகடை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
