ADDED : ஜூலை 17, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம், புதுநகரை சேர்ந்தவர் தம்புசாமி, 34; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், கடந்த 13ம் தேதி மாலை 6.00 மணியளவில் தனது பைக்கை (பி.ஒய்.01.இசட்.0176) கரியமாணிக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் எதிரில் நிறுத்தி சென்றார். மாலை வந்து பார்த்தபோது அவரது பைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
