ADDED : ஜூலை 20, 2026 07:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பைக்கை திருடிய மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்சாத்தமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சிவகுமார், 25; கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 16 ம் தேதி இரவு தனக்கு சொந்தமான பைக்கை வீட்டு எதிரில் நிறுத்திவிட்டு துாங்க சென்றார். பின் மறு நாள் அதிகாலை 6 மணியளவில் எழுந்து வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
