sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலி பங்கு சந்தை செயலியில் தொழிலதிபர் ஏமாந்த ரூ.75 லட்சம் மீட்பு

/

போலி பங்கு சந்தை செயலியில் தொழிலதிபர் ஏமாந்த ரூ.75 லட்சம் மீட்பு

போலி பங்கு சந்தை செயலியில் தொழிலதிபர் ஏமாந்த ரூ.75 லட்சம் மீட்பு

போலி பங்கு சந்தை செயலியில் தொழிலதிபர் ஏமாந்த ரூ.75 லட்சம் மீட்பு


ADDED : பிப் 25, 2025 04:54 AM

Google News

ADDED : பிப் 25, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைபர் கிரைம் போலீசார் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஆன்லைன் பங்கு சந்தை செயலி மூலம் இழந்த ரூ. 75 லட்சம் பணத்தை, சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஆன்லைன் மூலம் பங்கு சந்தை வர்த்தகம் செய்வதாக வந்த தகவலை நம்பி, ரூ.1 கோடி முதலீடு செய்தார்.

ஆனால், குறிப்பிட்டபடி லாபம் வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியாமல், அந்த தொழிலதிபர் ஏமாற்றப்பட்டார்.

போலியான மொபைல் செயலி மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆன்லைனில் தொழிலதிபர் இழந்த ரூ. 75 லட்சம் பணத்தை மீட்டு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் காவலர் ஜலாலுதீன் ஆகியோருக்கு, தொழிலதிபர் நன்றி தெரிவித்தார்.

சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'இதுபோன்ற ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி, கடந்தாண்டு மட்டும் ரூ. 30 கோடிக்கும் மேல், புதுச்சேரி சேர்ந்தவர்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர்.

எனவே, இணைய வழியில் அல்லது ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி, எந்த ஒரு பங்கு வர்த்தகம் மற்றும் பணத்தையும் முதலீடு செய்யும் செயலில் இறங்கி, பொது மக்கள் பணத்தை இழக்க வேண்டாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us