sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு

/

கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு

கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு

கோவில் குளத்தில் அனுமதியின்றி மீன் பிடிப்பு ; சிவனடியார்களால் லாாி சிறைபிடிப்பு


ADDED : ஜூலை 17, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து நேற்றிரவு அனுமதியின்றி மீன்களை பிடித்து ஏற்றி செல்ல முயன்ற லாரியை சிவனடியார்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி காந்தி வீதியில் வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் கோவில் நிர்வாகம் மூலம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவு கோயில் நிர்வாகம் மூலம் முறையாக எந்தவித டெண்டரும் விடப்படாமல், திடீரென அனுமதியின்றி கோவில் குளத்தில் இருந்த மீன்களை சிலர் பிடித்து, அதனை லாரியில் ஏற்றி செல்ல முயன்றனர்.

இது குறித்து அறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு, குளத்திலிருந்து அனுமதி இன்றி மீன்களை பிடித்து ஏற்றி செல்ல முயன்ற லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரியகடை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சிவனடியார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, முறையான அனுமதியின்றி மீன்களை பிடித்து செல்ல பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.

சிவனடியார்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us