/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 31, 2024 02:39 AM
புதுச்சேரி: மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத் தியதாக கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி ஜெயசுபா, 31; கடந்த 24.11.2019ம் ஆண்டு திருமணம் நடந்தது முதல் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விவtகாரத்து கேட்டு சிவராமன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிவராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஜெயசுபா, அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிவராமன், அவரது தந்தை ஏழுமலை, தாய் சாந்தி, மைத்துனர் சதீஷ் மற்றும் மோஷினி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.