sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குருக்களை தாக்கிய சிவனடியார் மீது வழக்கு

/

குருக்களை தாக்கிய சிவனடியார் மீது வழக்கு

குருக்களை தாக்கிய சிவனடியார் மீது வழக்கு

குருக்களை தாக்கிய சிவனடியார் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2024 05:57 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பல்லக்கு துாக்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் கோவில் குருக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிவனடியாரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 48; இவர் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், குருக்களாக பணி செய்து வருகிறார். கடந்த 4 நாட்களாக சாமி பல்லக்கு துாக்குவதில், கோவில் நிர்வாகத்திற்கும், சிவனடியார்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோவில் குருக்கள், கல்யாணசுந்தரம் நித்யபடி பூஜை, அர்த்த ஜாம பூஜைகள் செய்து வந்தார். தொடர்ந்து, பள்ளியறை சாமி பல்லக்கு புறப்பட்டு செல்லும் போது, பூஜையில் பங்கேற்ற, சிவனடியார் ராமலிங்கம், திடீரென கல்யாணசுந்தரத்தின் தலையில் வாத்தியத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து, தப்பி சென்று விட்டார். அதில், பலத்த காயமடைந்த குருக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, சிவனடியார் ராமலிங்கத்தை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us