/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணனுக்கு கத்தி வெட்டு தம்பி மீது வழக்கு
/
அண்ணனுக்கு கத்தி வெட்டு தம்பி மீது வழக்கு
ADDED : மே 09, 2024 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முன்விரோத தகராறில் அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம் ஜெ.ஜெ., நகரை சேர்ந்தவர் முருகன், 41; இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் இவரது தம்பி, அசோக்குமார், 39; இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, அசோக்குமார், கத்தியை எடுத்து தனது அண்ணன் முருகனை வெட்டினார். இதில், காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.