/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டல் ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
/
ஓட்டல் ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : மார் 07, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெரிய காலாப்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் ஆண்டியப்பன், 56; தனியார் ஹோட்டல் ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து, வேலைக்காக தனது பைக்கில் செனறார். அப்போது, சின்ன காலாப்பட்டு பகுதியில் சென்றபோது எதிரே பைக்கில் வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த மதியழகன், என்பவர் அவரை மோதுவது போல் வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் ஆண்டியப்பனை, மதியழகன் ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளார்.
புகாரின் பேரில், மதியழகன் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.