/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை கணவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
/
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை கணவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை கணவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை கணவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2024 03:42 AM
புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியிடம் வரதட்சனை கேட்டு, சித்ரவதை செய்த கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காமராஜர் நகர், ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அசோக்குமார், இவருக்கும் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த பூஜா, 23 என்பவருக்கும் கடந்த ஆண்டு புதுச்சேரியில் திருமணம் நடந்தது.
அசோக்குமார் தனது மனைவி பூஜாவை லண்டனுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 3 மாதம் கர்ப்பிணியாக இருந்த போது, பூஜாவை வரதட்சனை கேட்டு அசோக்குமார் சித்ரவதை செய்தார்.
இந்நிலையில், பூஜா லண்டனில் இருந்து தனது தாய் வீடான சென்னை பூந்தமல்லிக்கு வந்தார். கணவர் சித்ரவதை செய்த சம்பவத்தை எடுத்து சொல்ல பூஜா தனது பொற்றோருடன் நேற்று முன்தினம், புதுச்சேரியில் உள்ள மாமியார் வீட்டில் வந்து பேசினார்.
அப்போது, அவரை, அவதுாறாக அவரது மாமியார் தனலட்சுமி பேசினார். அதை தட்டி கேட்ட பூஜாவின் தந்தையை, அவரது மாமனார் தாக்கி கீழே தள்ளிவிட்டார். அதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து, பூஜா, பெரியக்கடை போலீசில், வரதட்சனை கேட்டு, சித்ரவதை செய்த கணவர், அசோக்குமார், மாமனார் ரவிச்சந்திரன், மாமியார் தனலட்சுமி ஆகியோர் மீது புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.

