ஏம்பலம் எம்.எல்.ஏ., அலுவலகம் முதல்வர் திறந்து வைப்பு
ஏம்பலம் எம்.எல்.ஏ., அலுவலகம் முதல்வர் திறந்து வைப்பு
ADDED : ஜூன் 18, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டு மோகன்தாஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, கிருமாம்பாக்கத்தில் உள்ள ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை புதுப்பித்து, நேற்று திறப்பு விழா நடந்தது.
மோகன்தாஸ் எம்.எல்.ஏ., வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரவிக்குமார், அழகானந்தம், முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் மற்றும் ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
