sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணிப்பு

/

பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டத்தில்  முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணிப்பு


ADDED : ஜூலை 27, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையிலான நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிடி ஆயோக் கூட்டம் இன்று நடக்கிறது. வழக்கமாக டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் மாநில முதல்வர்களுக்கு பதிலாக அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை நிடி ஆயோக் கூட்டத்தில், மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அமைப்பு கடிதம் அனுப்பியது. கடந்த வருடங்களில் முதல்வர் ரங்கசாமிக்கு பதிலாக நிடி ஆயோக் கூட்டங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றார். இவ்விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதேபோல் டெல்லியில் ஏற்கெனவே நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் ரங்கசாமி பங்கேற்காமல் இருந்தார். இம்முறை மாநில முதல்வர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அமைப்பு கடிதம் அனுப்பி இருந்ததால், நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியே பங்கேற்பார்.

அப்படியே பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு முதல்வர் ரங்கசாமி டில்லி செல்லவில்லை. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்த பிறகு ஆளும் கட்சியான என்.ஆர் காங்.,-பா.ஜ., உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

குறிப்பாக பா.ஜ., அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட முகாமிட்டு இருந்தனர். ஆனால் பார்லிமெண்ட் கூட்ட தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பிசியாக இருந்ததால் ஏமாற்றத்துடன் புதுச்சேரி திரும்பினர். இது போன்ற சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நிடி ஆயோக் கூட்டத்தினை

ரங்கசாமி தவிர்த்தது ஏன் புதுச்சேரி அரசு யூனியன் பிரதேசமாக இருப்பதால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அதன்படி 12,700 கோடிக்கு பட்ஜெட் தயார் செய்து அனுப்பி இருந்தது. ஆனால் உடனடியாக பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே அப்போதே முதல்வர் ரங்கசாமி டில்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23 ம்தேதி புதுச்சேரி அரசின் பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்தது. ஏற்கனவே பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்து விட்டதால் நிடி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். பட்ஜெட் கூட்ட தொடர்ந்து 31ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்ட தொடர் முடிந்ததும் டில்லி சென்று, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.








      Dinamalar
      Follow us