/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெறலாம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு
/
நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெறலாம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு
நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெறலாம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு
நமச்சிவாயம் வென்றால் கூடுதல் நிதி பெறலாம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேச்சு
ADDED : ஏப் 05, 2024 05:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து உப்பளம் தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
ஏழைகளுக்கு நல்ல உணவு, வீடு, உடுத்த உடை என அடிப்படை வசதிகள் முக்கியம். எங்களது அரசு இவற்றை செய்து கொடுக்கவே முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வீடு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க ஆயிரக்கணக்கானவீடுகளை பல்வேறு பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம்.
சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கின்றது; இதனை போடுவார்களான என கேட்டனர். இப்போது போய் பாருங்கள்சாலைகளை சீரமைத்து வருகிறோம்.
450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இது போன்ற திட்டங்களை எப்போது நம்மால் எப்படி செய்ய முடியும்.
கடந்த காங்., ஆட்சியில் இதெல்லாம் நடந்ததா. மத்தியில் உள்ள அரசோடு சுமூக உறவு ஆட்சி புதுச்சேரியில் நடக்க வேண்டும். நாம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் கவர்னர் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசு உதவி கிடைக்க வேண்டும். அதற்கு புதுச்சேரியில் இருந்து பா.ஜ., எம்.பி., சென்றால் தான் கூடுதல் நிதி பெற முடியும்.
கடந்த 5 ஆண்டுகளாக வைத்திலிங்கம் எம்.பி.,யாக இருந்தார். அவரால் லோக்சபாவில் பேசி எதையாவது பெற்றுதர முடிந்ததா. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் மீண்டும் மத்தியில் வரப்போகிறது.
மத்திய அரசின் அனுமதி பெற்று ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்குவோம்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன். உங்கள் குறைகளை நேரில் சொல்லுங்கள். நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றிப் பெற செய்யுங்கள்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
பிரசாரத்தில் எம்.எல்.ஏ.,கள் வெங்கடேசன், ராமலிங்கம், பா.ஜ., செயலாளர் சாம்ராஜ், என்.ஆர். காங்., மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

