
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளூனி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 348 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் மாணவிகள் பெட்ரீசியா மேரி 495, சஞ்சனா 493, அனுஷ்� கிருஷ்ணா, சமயா� ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
475க்கு மேல் 61 பேரும், 450க்கு மேல் 165 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் 3 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் 11 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 9 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் அருட்சகோதரி ரோசிலி பொன்னாடை அணிவித்து, பாராட்டினார்.