நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
மரப்பாலம் அருகே நுாறடி சாலை ஜெயம் நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கதிர், ஜெயம் நகர்.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் வாகன விபத்து நடந்து வருகிறது.
ரவி, தவளக்குப்பம்.
நிழற்குடை பழுது
அரியாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை பழுதாகி உள்ளதால் பயணிகள் திறந்த வெளியில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மதி, அரியாங்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சரவணன், காந்தி வீதி.

