
நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை அசோக் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சாந்தி, லாஸ்பேட்டை.
----------------------------------------------------நெல்லித்தோப்பு சத்யா நகர் கிழக்கு பகுதியில் நாய்கள் மக்களை துரத்துவதால், அப்பகுதியினர் நடந்து செல்ல அச்சமடைந்து வருகின்றனர்.
தண்டபாணி, நெல்லித்தோப்பு.
---------------------------------------------------சாலையில் கொட்டிய ஜல்லியால் அவதி
முருங்கப்பாக்கம் அவிரந்தர் நகர் 9வது குறுக்கு தெருவில், சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பணிகள் துவங்காததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மூர்த்தி, முருங்கப்பாக்கம்.
----------------------------------------------------------தெருவிளக்கு எரியவில்லை
உழவர்கரை பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
காந்தி, உழவர்கரை.
சிமென்ட் சிலாப் சேதம்
குருமாம்பேட்டையில் இருந்து முருகா தியேட்டர் வரை, கழிவுநீர் செல்லும் வாய்க்கால் மேலே உள்ள சிமென்ட் சிலாப் தேமடைந்துள்ளது
கந்தசாமி, குருமாம்பேட்.
கொசு தொல்லை
வில்லியனுார் பகுதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் கொசுக்கள் அதிகமாக இருப்பதால், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
தெரு விளக்கு எரியவில்லை
உழவர்கரை பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
காந்தி, உழவர்கரை.
ஆக்கிரமிப்பால் இடையூறு
நைனார்மண்டபம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சிவராமன், புதுச்சேரி.
கழிவுநீர் தேக்கம்
முத்தியால்பேட்டை, குரு சித்தானந்தா வீதி வாய்க்காலில், குப்பைகள் அடைத்து, கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது.
ரவி, முத்தியால்பேட்டை.

