UPDATED : ஜூலை 01, 2026 07:05 PM
ADDED : ஜூலை 01, 2026 06:42 PM
கழிவுநீர் தேங்கி நிற்கிறது: புவன்கரே வீதி, கீரப்பாளையம் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
கமலா, லாஸ்பேட்டை.
மின் விளக்கு எரியவில்லை: நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் முதல் மெயின் ரோட்டில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.
செல்வன், புதுச்சேரி.
குப்பை வண்டி வரவில்லை: காலாப்பட்டு, பாரதி நகர், 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது.
கணேசன், காலாப்பட்டு.
சாலை மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் மார்க்கெட் போன்று கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ரவி, உப்பளம்.
நாய்கள் தொல்லை: புது சாரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
காமராஜ், புதுச்சேரி.
கழிவுநீர் வாய்க்கால் தேவை: மங்கலம் உறுவையாறு, பெருமாள் சிலைமேடு பகுதியில் கழிவுநீர் சைடு வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது.
புவனேஷ், உறுவையாறு.
