sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீர்கதா விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு

/

வீர்கதா விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு

வீர்கதா விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு

வீர்கதா விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு


ADDED : பிப் 10, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வீர்கதா விருது பெற்ற வ.உ.சி. அரசு பள்ளி மாணவர் விஜய விவேஷ்குமாருக்கு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி, வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 வகுப்பு மாணவர் விஜய விவேஷ்குமார். தேசிய அளவில் இந்திய பாதுகாப்பு துறை மற்றும் கல்வித்துறை நடத்திய வீர்கதா போட்டியில் கலந்து கொண்டு, பழங்குடியின மக்களின் நிலங்களை மீட்க ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய பிர்சா முண்டா வாழ்கை வரலாற்றை ஓவியமாக வரைந்து, வீர்கதா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து,டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வீர்கதா விருது, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

வீர்கதா விருது பெற்று புதுச்சேரி திரும்பிய மாணவர் விஜய விவேஷ்குமாருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கி, விருது பெற்ற மாணவர், வழிகாட்டிய நுண்கலை ஆசிரியர் முருகேச பாரதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us