ADDED : ஜூன் 18, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தொடர் விடுமுறையால் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
புதுச்சேரியில் ஒவ்வொரு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாரவிடுமுறை நாட்களில் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர். போதிய படகுகள் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு மற்றும் நேற்று பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து, விடுமுறை என்பதால் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அதனால், படகு குழாமில் உள்ள பார்கிங்கில் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சாலையோர பகுயில் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
