ADDED : ஜூலை 14, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் அங்காளம்மாள், 21. இவர் லேப் டெக்னீஷியன் படித்துள்ளார். அரியாங்குப்பத்தில் உள்ள ஆரி ஒர்க் பயிற்சி வகுப்பிற்கு கடந்த ஒரு மாதமாக சென்று வந்தார்.
நேற்றுகாலை பயிற்சி வகுப்பிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.