ADDED : ஜூன் 18, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, கடந்த 14ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி மற்றும் சுவாமி வீதியுலாநேற்று முன்தினம் நடந்தது.
இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.