நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்:பி.எஸ்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் இன்று நடக்கிறது.
மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, இன்று (17ம் தேதி) காலை 11:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

