நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் (6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
இன்று 9ம் தேதி மதியம் 3:00 மணி அளவில் பகாசூரன் அன்னம் எடுத்தல, வரும் 13ம் தேதி திருக்கல்யாண நடக்கிறது.
மறுநாள் 14ம் தேதி காலை தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.