/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூங்கொடியம்மன் கோவிலில் தீமிதி விழா
/
பூங்கொடியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஏப் 29, 2024 04:04 AM
திருக்கனுார், : புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் பூங்கொடி அம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி உற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி,தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வீதிவுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு திரவுபதி அம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தீமிதித்து வழிப்பட்டனர்.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

