/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்'
/
ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : மே 01, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பூமியான்பேட்டை ராகவேந்திரா நகரில் நாளை குடிநீர் நிறுத்தப்படுகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி, பூமியான்பேட்டை ராகவேந்திரா நகர் கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 2ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப் படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.