ADDED : ஜூன் 14, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நகர பகுதியில் நாளை மதியம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம் வடக்கு பிரிவுக்குட்பட்ட வடக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 15ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
எனவே நேரு வீதி, அண்ணாசாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, கடற்கரை சாலை, வாழைக்குளம், சின்னையாபுரம், குருசுக்குப்பம், ராமகிருஷ்ணா நகர், திருவள்ளுவர் நகர், அப்துல் கலாம் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும் என, கூறப்பட்டுள்ளது.