/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 12, 2024 04:51 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அன்னை ராணி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போதைப் பொருட்களின் தீமைகள், அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பங்கேற்று, குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டம், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
வகுப்பு வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணி வித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்து நாதன், ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.