UPDATED : ஜூலை 27, 2026 11:21 PM
ADDED : ஜூலை 27, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: துாக்கம் இல்லாமல் அவதியடைந்த முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்தவர் அழகநாதன், 79; இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன் இறந்தார். மனைவி இறந்த நாளில் இருந்து அவர் மன உளைச்சல் மற்றும் துாக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் இருந்த உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டில் பாத்ரூமில் அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
