/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 31, 2024 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : காலாப்பட்டு அம்பேத்ககர் அரசு சட்டக்கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், வாக்காளர் பதிவு அதிகாரி சுரேஷ்ராஜ், தேர்தல் பங்களிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, தலைமை தேர்தல் அதிகாரி ரவிகுமார் ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் மூலம் முதல் முறை வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவும் செய்து காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்காளர் பதிவு அதிகாரி யஷ்வந்தையா தலைமையில், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு கலைக் கல்லுாரி யில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி, மெஹந்தி விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

